உள்ளூர் செய்திகள்
- கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படிக்கும் மாணவி மாயம்
- இதனால் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்த ராஜேஸ்வரி மகள் கீர்த்தனா. இவர் நாமக்கல் கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த 16-ந்தேதி கல்லூரிக்கு சென்ற இவர் மாலை வீடு திரும்பவில்லை. ராஜேஸ்வரி தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரஜேஸ்வரி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்.