உள்ளூர் செய்திகள்

கோவை - நாகர்கோவில் ெரயில் பகுதியாக ரத்து

Published On 2023-05-03 09:26 GMT   |   Update On 2023-05-03 09:26 GMT
  • கோவில்பட்டி-குமாரபுரம் இடையே ெரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • ெரயில் இன்றும், வருகிற 17-ந் தேதியும் தேதியும் ரத்து.

கோவை,

கோவை-நாகர்கோவில் ெரயில் இன்றும், வருகிற 17-ந் தேதியும் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ெரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ெரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை ெரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி-குமாரபுரம் இடையே ெரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ெரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, இன்றும், வருகிற 17-ந் தேதியும் காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் (எண் 16322) திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ெரயிலானது கோவை-திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும்.

இதேபோல மே 3 மற்றும் 17-ந் தேதி காலை 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில்-கோவை விரைவு ெரயில் (எண் 16321) நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ெரயிலானது, திண்டுக்கல்-கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News