கோவையில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 10 திருநங்கைகள் மீது வழக்கு
- திருநங்கைகள் தகாத வார்த்தைகளால் பேசி ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்
கோவை,
கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக காளீஸ்வரி (வயது 49) என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ரோந்து வாகனத்தில் டாடாபாத் மின்வாரிய அலுவலகம் வழியாக ரோந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த திருநங்ககைள் அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து கொண்டு இருந்தனர். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி பிச்சை எடுக்க கூடாது என திருநங்ககைளிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் தகாத வார்த்தைகளால் பேசி ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர்.
மேலும் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி காட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நித்யா உள்பட 10 திருநங்ககைள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.