அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோவில் திருவிழா
- பரமத்தி வேலூர் தாலுகா கு.அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோவில்திருவிழா கடந்த சனிக்கிழமை இரவு பூச்சாட்டு தலுடன் தொடங்கியது.
- அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கு.அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோவில்திருவிழா கடந்த சனிக்கி
ழமை இரவு பூச்சாட்டு தலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
2-ந் தேதி வடி சோறு நிகழ்ச்சியும், நேற்று முன் தினம் மாலை பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் பகவதி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் கோயில் முன்பு தயாராக இருந்த தீக்குண்டத்தில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து மாலை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், இரவு மாவிளக்கு களை ஊர்வலமாக கொண்டு சென்றும் அம்மனை வழிபட்டனர்.
நேற்று காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாலை
மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடு களை கோவில் திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.