திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா
- பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்க ண்ணிக்கு பாதயாத்தி ரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
- 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவி ழாவாக கொண்டா டப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா நாளை 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்தவிழா அடுத்த மாதம் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
நாளை மாலை 5.45 மணிக்கு கொடி கடற்கரை சாலை ஆரியநாட்டு தெரு வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்து கொடியேற்றி வைக்கிறார்.
இதை தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. 8-ந்தேதி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயம் மின்விள க்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.
மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்தி ரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சியும், பேராலய நிர்வாகமும் இணைந்து செய்து வருகிறது.
விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.