உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-10 14:55 IST   |   Update On 2022-11-10 14:55:00 IST
  • ஜெயங்கொண்டத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது

அரியலூர்:

பல்வேறு கோரிக்கை–களை வலியு–றுத்தி, ஜெயங்கொண்டம் நகராட்சி முன்பு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை–பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி–களில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட பணியா––ளர்களை பணி மாறுதல் செய்வதை முற்றி–லும் தவிர்க்க வே–ண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை–பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் ஷோபா தலைமை தாங்கினார். மகளிர் அணி தலைவர் சரஸ்வதி வரவேற்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுஊழியர் சங்க மாவட்ட செயலா–ளர் வேல்முருகன் சிறப்புரை–யாற்றினார்.

வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் குமணன், சத்துணவு ஊழியர் சங்க இணை செயலாளர் ஷர்மிளா, சாலை பணியா–ளர்கள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் தர்மலிங்கம் ஒப்பந்த பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சசிகுமார் அரசு அலுவலர்கள் ஒன்றிய மாவட்டத் துணைச் செயலாளர் விஜயராகவன் உள்ளிட்ட பலர் 152 விதிப்படி ஏற்படும் விளை–வுகளைப் பற்றி பேசினர்.

நகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News