உள்ளூர் செய்திகள்
- போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இராஜகிரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், புகையிலை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, இராஜகிரியில் அமைந்துள்ள முக்கிய வீதிகளின் வழியாக புகையிலை மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக கோசங்கள் எழுப்பியபடி, பேரணியாக சென்று, போதைகளின் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.