உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-07-06 12:40 IST   |   Update On 2023-07-06 12:40:00 IST
  • மணிகண்டன் ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் உள்ள பூக்கடையில் மாலை கட்டும் வேலை செய்து வந்தார்.
  • பலத்த காயம் அடைந்த மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

திருத்தணி:

திருத்தணி அடுத்த குண்டலூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மணிகண்டன்(வயது23). இவர் ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் உள்ள பூக்கடையில் மாலை கட்டும்வேலை செய்து வந்தார். நேற்று இரவு 11 மணி அளவில் அவர் வேலை முடிந்து திருத்தணி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

பொன்பாடி அருகே திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News