உள்ளூர் செய்திகள்
- 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் காட ம்பாடி மறைமலைநகரில் உள்ள பழமை வாய்ந்த கருமாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. ஏழைப் பிள்ளையார் கோவிலில் இருந்து நூற்றுக்கும்மேற்ப ட்ட பெண்கள் அம்ம னுக்கு பூதட்டுகளை கையில் ஏந்தியவாறு கருமாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர்.பின்னர் கோவி லை சென்றடைந்த பக்தர்கள் அங்கு தங்களது நேர்த்தி க்கடன் நிறைவேற்றும் விதமாக அம்மனுக்கு பூவால் அபிஷேகம்செய்து மகா தீபாராதனை காண்பி க்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.