கோவையில் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்
- இளம்பெண்ணுக்கு அதே ஓட்டலில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
- இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கோமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.
கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஊஞ்சவேலம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார். அப்போது இளம்பெண்ணுக்கு அதே ஓட்டலில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் கார ணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மேலும் இளம்பெண்ணை அவரது கணவர் வேலையை விட்டும் நிறுத்தினார். சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வேலை சம்பந்தமாக வெளியூருக்கு சென்று இருந்தார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.
இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கோமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.