உள்ளூர் செய்திகள்

கோவையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்

Published On 2023-06-15 09:00 GMT   |   Update On 2023-06-15 09:00 GMT
  • வாலிபர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு வருகிற 20-ந் தேதி திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்தனர்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். நர்சிங் பட்டதாரி.

இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது. வாலிபர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களது மகளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்தனர்.

அதன்படி மாப்பிள்ளை பார்த்த இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு வருகிற 20-ந் தேதி திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்தனர்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் பொள்ளாச்சிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர், தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

வெளியே சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இளம் பெண்ணின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தனர். மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து மீட்டுத்தருமாறு புகாரில் கூறி இருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News