உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே ஊர்வலத்தில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்

Published On 2022-08-10 08:31 GMT   |   Update On 2022-08-10 08:31 GMT
  • பண்ருட்டி அருகே ஊர்வலத்தில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
  • அதே ஊரை சேர்ந்த வினோத், மலையப்பன், குப்பன் ஆகியோர் சாவு .

கடலூர்:

கடலூர் செல்லங்கு ப்பத்தை சேர்ந்த பிரசாந்த (24)., இவர் கடந்த 8ம் தேதிதனது பாட்டி இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் வந்தார். கோட்டலாம்பாக்கம் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் அதே ஊரை சேர்ந்த வினோத், மலையப்பன், குப்பன் ஆகியோர் சாவு ஊர்வலத்தில் மதுகுடித்து ஆட்டம் போட்டுள்ளனர். அவர்களிடம் ஏன் இப்படிகுடித்து விட்டுபிரச்சனை செய்கிறீர்கள் என்று பிரசாந்த் கேட்டுள்ளார்இதனால் ஆத்திரமடைந்த மூவரும் பிரசாந்தை அசிங்கமாக திட்டிதாக்கிகொலைமிரட்டல்விடுத்தனர். காயமடைந்த பிரசாந்த் கடலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News