உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் நர்சிங் மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர்

Published On 2023-08-05 15:15 IST   |   Update On 2023-08-05 15:15:00 IST
  • கடந்த 22-ந் தேதி மாணவியை தேடி விஸ்வநாதன் பொள்ளாச்சிக்கு வந்தார்.
  • போலீசார் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தற்போது இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பயிற்சி நர்சாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நாகப்பட்டிணத்தை சேர்ந்த ஜே.சி.பி. ஆபரேட்டர் விஸ்வநாதன் (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு பேசி பழகி வந்தனர்.

கடந்த 22-ந் தேதி மாணவியை தேடி விஸ்வநாதன் பொள்ளாச்சிக்கு வந்தார். பின்னர் அவர் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்றார். அங்கு வைத்து அவர் மாணவியை திருமணம் செய்து பலாத்காரம் செய்தார்.

மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடினர்.

அப்போது அவர் கேரளாவில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கேரளாவுக்கு சென்ற போலீசார் விஸ்வநாதனுடன் தங்கி இருந்த மாணவியை மீட்டனர். அவரை கடத்தி சென்று திருமணம் செய்த விஸ்வநாதனை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் 2 பேரையும் மகாலிங்கபுரத்துக்கு அழைத்து வந்தனர். மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News