மதுக்கரை அருகே மனைவி தற்கொலைக்கு முயன்றதால் ராணுவ வீரர் தூக்கில் தொங்கினார்
- மனவேதனை அடைந்த ரேணுகா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு கணேசன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
கோவை,
கோவை மதுக்கரை அருகே உள பாலத்துறை மெயின் ரோட்டை சேர்ந்தவர் கணேசன் (வயது 68). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி ரேணுகா (54). இவர்களுக்கு வைஷ்ணு என்ற மகன் உள்ளார்.
தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ரேணுகா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
மயங்கிய நிலையல் இருந்த அவரை கணேசன் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று கணேசன் தனது மனைவியை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் மீண்டும் வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் தனியாக இருந்த அவர் மனைவி தூக்க மாத்திரை சாப்பிட்டதற்கு அவர் தான் காரணம் என நினைத்து மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கணேசன் வீட்டில் அருகே உள்ள தேக்கு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு கணேசன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி இருந்தார்.
பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.