உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே மகன்களை பள்ளியில் சேர்க்க முடியாததால் தாய் தற்கொலை செய்துகொண்டார்.

Published On 2022-06-19 08:28 GMT   |   Update On 2022-06-19 08:28 GMT
  • கடலூர் அருகே மகன்களை பள்ளியில் சேர்க்க முடியாததால் தாய் தற்கொலை செய்துகொண்டார்.
  • உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடலூர்:

கடலூர் முதுநகர் அருகே உள்ள, மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.அவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள, ஒரு அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ஜெயச்சந்திரன் வேலைக்காக குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனது மகன்களை, தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாத ஏக்கத்திலிருந்த சுந்தரி,சம்பவத்தன்று, வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு, மயங்கி கிடந்தார்.

இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சுந்தரி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்த புகாரின்பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News