உள்ளூர் செய்திகள்

நெகமம் அருகே இளம்பெண்ணை வீட்டிற்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர்

Published On 2023-07-25 09:59 GMT   |   Update On 2023-07-25 09:59 GMT
  • இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்
  • போலீசார் பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் சதீசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கோவை,

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கப்பலாங்கரையை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு செல்போனை பார்த்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சதீஸ் (வயது 37) என்பவர் இளம்பெண்ணின் வாயை மூடி அவரை வீட்டிற்குள் தூக்கி சென்றார். பின்னர் அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சி யடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

உடனே சதீஸ், இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து இளம்பெண் நெகமம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணை வீட்டிற்குள் தூக்கி சென்ற பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் சதீசை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News