உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே இளம்பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு

Published On 2023-10-21 08:27 GMT   |   Update On 2023-10-21 08:27 GMT
  • அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
  • இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் அப்பெண் புகார் கொடுத்தார்.

கடலூர்:

கடலூரை சேர்ந்தவர் 32 வயது பெண்ணின் கணவர் கடந்த 3 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவர் தற்போது தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவர் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதோடு, அந்தப் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் அப்பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெண்ணிற்கு கொலைமிரட்டல் விடுத்த விஜய் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News