மேட்டுப்பாளையத்தில் செல்போன் பேசியதை தந்தை கண்டித்ததால் 17 வயது சிறுமி தற்கொலை
- விஷம் தின்று மயங்கி விழுந்தார்
- கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ராமசாமி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகள் அபிராமி (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள பல் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார்.
அபிராமி யாருடனோ அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஷத்தை சாப்பிட்டார். பின்னர் யாரிடமும் சொல்லாமல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். வேலையில் இருந்த போது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அபிரா மியை பரிசோதனை செய்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அபிராமியை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.