உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே இருசக்கர வாகனங்கள் திருடிய அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் கைது

Published On 2023-04-09 15:01 IST   |   Update On 2023-04-09 15:01:00 IST
  • வாகனங்கள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த மதன் ஸ்டாலின் களக்காடு போலீசில் புகார் செய்தார்.
  • திருட்டில் ஈடுபட்ட முப்பிடாதி உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

களக்காடு:

களக்காடு கக்கன்நகரை சேர்ந்தவர் மதன் ஸ்டாலின் (வயது45). விவசாயி. நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பத்மநேரி பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அவரது நண்பரான கேசவநேரியை சேர்ந்த சண்முகவேல் மொபட்டில் வந்தார். இருவரும் மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டை நிறுத்தி விட்டு, சிறிது தூரம் சென்று பேசிக் கொண்டிருந்தனர். திரும்பி வந்து பார்த்த போது, மோட்டார் மற்றும் மொபட்டை காணவில்லை. மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள், மொபட்டை திருடி சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மதன் ஸ்டாலின் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம் அலி, சப்-இன்ஸ் பெக்டர் இசக்கி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் இருசக்கர வாகனத்தை திருடியது, கீழதேவநல்லூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அண்ணன், தம்பிகளான முப்பிடாதி (23), இசக்கிபாண்டி (22), கல்லிடைகுறிச்சி அருகே உள்ள வைராவிகுளத்தை சேர்ந்த மாடசாமி என்ற மகேஷ் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News