செய்திகள்
மரணம்

அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி

Published On 2020-01-03 11:07 GMT   |   Update On 2020-01-03 11:07 GMT
அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கியதில் வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

உத்தரபிரேதச மாநிலத்தை சேர்ந்தவர் சிராஜ் (24). இவர் சென்னையில் உள்ள கோழி கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் அரக்கோணம் அருகேயுள்ள காவனூர் நரசிங்க புரத்தில் கோழி வாங்குவதற்காக லாரியில் இன்று காலை வந்தனர். அப்போது லாரியின் மேல் பகுதியில் உடகார்ந்து வந்த சிராஜ் மீது மின்சார கம்பி உரசியது.

இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி சம்பவ இடத்திற்கு சென்று சிராஜ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News