செய்திகள்
தற்கொலை

வாலாஜா அருகே கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2020-01-03 16:33 IST   |   Update On 2020-01-03 16:33:00 IST
வாலாஜா அருகே வீட்டில் கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:

வாலாஜா அனந்தலை ரோடு புது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (24). கார் டிரைவர் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன் வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாலாஜா போலீசார் மணிகண்டன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News