செய்திகள்
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உடல்.

ராணிப்பேட்டையில் கிணற்றில் வீசி குழந்தை கொலை - போலீசார் விசாரணை

Published On 2020-01-01 09:15 GMT   |   Update On 2020-01-01 09:15 GMT
ராணிப்பேட்டையில் கிணற்றில் வீசி பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:

ராணிப்பேட்டை காரை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான விளையாட்டு மைதானம் உள்ளது.

இங்கு பயனற்ற நிலையில் கிணறு இருக்கிறது. கிணற்றிலிருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கிணற்றில் எட்டி பார்த்தபோது கிணற்றில் குழந்தையின் உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி அசோக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மிதந்த குழந்தையின் பிணத்தை மீட்டனர்.

குழந்தையின் உடல் முழுவதும் மீன்கள் கடித்து அழுகிய நிலையில் இருந்தது. குழந்தையை கிணற்றில் வீசி ஒரு வாரம் ஆகியிருக்கலாம் என தெரிகிறது.

பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கிணற்றில் வீசி சென்றது யார்? எதற்காக வீசி சென்றனர்? கள்ளக்காதலில் பிறந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News