செய்திகள்
குடியாத்தம் அருகே ஆந்திர எல்லையில் காட்டு யானை பலி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆந்திர எல்லையில் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள பரதராமி கொத்தூர் ரெட்டியார் பள்ளம் கிராமம் ஆந்திர எல்லையையொட்டி உள்ளது.
இந்த கிராமத்திலுள்ள விவசாய நிலத்தில் இன்று காலை ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
இதனை பார்த்த அந்த கிராமத்தினர் உடனடியாக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக இரு மாநில வனத்துறை அலுவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வயது முதிர்ந்த நிலையில் நீளமான இரு தந்தங்களுடன் ஆண் யானை இறந்து கிடப்பது தெரியவந்தது.
மேலும், அந்த பகுதியில் மிகக்குறைந்த உயரத்தில் மின்சார கம்பி சென்றதால் மின்சாரம் தாக்கி யானை இறந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, ஆண் யானையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடு செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இரு மாநில வனத்துறை அலுவலர்களும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள பரதராமி கொத்தூர் ரெட்டியார் பள்ளம் கிராமம் ஆந்திர எல்லையையொட்டி உள்ளது.
இந்த கிராமத்திலுள்ள விவசாய நிலத்தில் இன்று காலை ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
இதனை பார்த்த அந்த கிராமத்தினர் உடனடியாக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக இரு மாநில வனத்துறை அலுவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வயது முதிர்ந்த நிலையில் நீளமான இரு தந்தங்களுடன் ஆண் யானை இறந்து கிடப்பது தெரியவந்தது.
மேலும், அந்த பகுதியில் மிகக்குறைந்த உயரத்தில் மின்சார கம்பி சென்றதால் மின்சாரம் தாக்கி யானை இறந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, ஆண் யானையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடு செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இரு மாநில வனத்துறை அலுவலர்களும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.