செய்திகள்

சந்தவாசல் அருகே நிலத்தகராறில் விவசாயியை தாக்கியவர் கைது

Published On 2019-05-18 11:11 GMT   |   Update On 2019-05-18 11:13 GMT
சந்தவாசல் அருகே நிலத்தகராறில் விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணமங்கலம்:

சந்தவாசல் அருகே உள்ள மங்களாபுரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (41) என்பவருக்கும், அவரது சகோதரர் ஏழுமலைக்கும் நீண்ட காலமாக நிலத் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

கடந்த 2-ம்தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டபோது, ஏழுமலையின் மருமகன் வடுகசாத்தை சேர்ந்த வெங்கடேசன்(32) என்பவர் ரமேஷை ஆபாசமாக திட்டி தாக்குதல் நடத்தியதாக நேற்று சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்கு பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News