செய்திகள்

ஆதம்பாக்கத்தில் இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த ரவுடி

Published On 2019-04-30 09:59 GMT   |   Update On 2019-04-30 09:59 GMT
சென்னை ஆதம்பாக்கத்தில் 17 வயது இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த ரவுடியை கைது செய்ய வேண்டும் என்று அப்பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆலந்தூர்:

ஆதம்பாக்கம், அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் ராபின். ரவுடி. இவர் மீது ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 6 கொலை வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் ராபின் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை சந்தித்து அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.

சம்பவத்தன்று இளம்பெண் வெளியே சென்று இருப்பதை அறிந்த ராபின் பின் தொடர்ந்து சென்றார். திடீரென அவர் இளம்பெண்ணை மிரட்டி கடத்தி சென்றார்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மாந்தோப்பில் வைத்து அவரை கற்பழித்தார். பின்னர் இளம்பெண்ணை துரைப்பாக்கத்தில் விட்டு விட்டு ராபின் தப்பி ஓடி விட்டார்.

வீட்டுக்கு திரும்பிய இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி மடிப்பாக்கத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இளம்பெண்ணை ராபின் கடத்தி சென்றபோது மாந்தோப்பில் அவரது நண்பர்கள் 4 பேர் இருந்ததாக தெரிகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூறும்போது, “உறவுப் பெண்ணுக்கு நடந்த கொடுமை குறித்து மடிப்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி புகாரை வாங்க மறுக்கிறார். மேலும் புகாரை வாபஸ் பெறக்கோரி எங்களை மிரட்டுகிறார்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடி ராபினை கைது செய்ய வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News