இந்தியா

SIR - புதிய விளக்கம் அளித்த திரிணாமுல் காங்கிரஸ்

Published On 2026-01-20 17:42 IST   |   Update On 2026-01-20 17:42:00 IST
  • கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது.
  • இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது

புதுடெல்லி:

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 'தர்க்கரீதியான முரண்பாடுகள்' பிரிவின் கீழ் வரும் வாக்காளர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஆட்சேபணைக்குரிய 1.25 கோடி வாக்காளர்களின் பெயர்களைக் கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கவும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் 10 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் மற்றும் துணைத்தலைவர் எம்.பி.

சகரிகா கோஸ் ஆகியோர் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

திரிணாமுல் காங்கிரஸ் (TMC), மேற்கு வங்காளத்தில் தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) குறித்து, வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகளை நீக்க, நீதிமன்றத்தின் தலையீட்டை வரவேற்று, இதை

நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

இந்த SIR நடவடிக்கை மென்பொருள் சார்ந்த முறைகேடு (Software Intensive Rigging) ஆகும். வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்க முயல்கிறது. இது பாஜகவின் சதி என குற்றம் சாட்டினர்.

Tags:    

Similar News