காங்கிரஸ் மேலிடம் அழைத்தால் டெல்லி செல்வேன்: சித்தராமையா
- டி.கே. சிவக்குமார் அடுத்த முதல்வராவார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரசாரிடம் எழுந்து வருகிறது.
- காங்கிரஸ் மேலிடம்தான் இதுகுறித்து முடிவு செய்யும் என சித்தராமையா திட்டவட்டம்.
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவி தொடர்பான பிரச்சினை காங்கிரசில் இன்னும் நீடித்து வருகிறது. சித்தராமையாவின் இரண்டரை வருட முதலமைச்சர் பதவிக் காலம் முடிவடைந்ததால், டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறார்.
ஆனால், காங்கிரஸ் மேலிடம்தான் இதுகுறித்து முடிவு செய்யும். 5 வருட முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளதாக சித்தராமையா தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்த நிலையில், சித்தராமையாவிடம் நீங்கள் டெல்லிக்கு செல்ல வாய்ப்புள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சித்தராமையா, "காங்கிரஸ் மேலிடம் அழைத்தால் நான் டெல்லிக்கு செல்வேன்" என்றார்.
துணை முதல்வரான டி.கே. சிவக்குமார் டெல்லியில் இருந்து நேற்று கர்நாடகம் திரும்பினார். இதன்மூலும் தலைமைத்துவம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்பதை அவரது டெல்லி பயணம் குறிக்கிறது.
சித்தராமையா உள்பட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரது ஆதரவும் தனக்கு இருப்பதாக டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.