செய்திகள்
காரைக்குடியில் வாலிபர் தற்கொலை- போலீசார் விசாரணை
நண்பரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி வாங்கிய ரூ.8 லட்சத்தை திருப்பிக்கொடுக்க முடியாததால் மனம் உடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
காரைக்குடி:
காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த வீரப்பன் மகன் சின்னையா (வயது 35). இவர் தனது நண்பர் செல்வம் (35) என்பவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி இருந்து ரூ.8 லட்சம் வாங்கினார். அதை புரோக்கரிடம் செலுத்தினார்.
நீண்ட நாட்களாகியும் செல்வத்தை வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. பணமும் கிடைக்கவில்லை.
இது குறித்து செல்வம், சின்னையாவிடம் கேட்டபோது சரிவர பதில் சொல்லவில்லை.
இதில் மனம் உடைந்த சின்னையா நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தாயார் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.