செய்திகள்
நாகையில் மணல் அள்ளிய லாரி பறிமுதல்- டிரைவர் கைது
நாகையில் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நாகூர் வெட்டாற்று பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டிவந்த நாகூர் குயவர் தெருவை சேர்ந்த மரிய கண்ணு மகன்
ரஞ்சித் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.