செய்திகள்

நாராயணசாமி போராட்டத்துக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

Published On 2019-02-14 04:33 GMT   |   Update On 2019-02-14 04:33 GMT
புதுவை கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டெலிபோனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். #congress #Narayanasamy #MKStalin
புதுச்சேரி:

புதுவை கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது போராட்டத்தின் காரணம் குறித்தும், போராட்டத்தின் தன்மை குறித்தும் கேட்டறிந்தார்.



இந்த போராட்டம் வெற்றி பெறுவதற்காக வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் நாராயணசாமியிடம் கூறினார்.

இதேபோல் புதுவை காங்கிரஸ் மேலிட பார்வையாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக், மேலிட தலைவர் சஞ்சய்தத் ஆகியோரும் நாராயணசாமியை தொடர்பு கொண்டு போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். #congress #Narayanasamy #MKStalin
Tags:    

Similar News