செய்திகள்
வல்லம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள மேட்டுப்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29). கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ளஆற்றங்கரைக்கு சென்றார். அங்கு வைத்து திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு விஜயகுமார் பரிதாபமாகணீ இறந்தார்.
இது குறித்து வல்லம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் குடும்ப பிரச்சினை காரணமாக விஜயகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.