செய்திகள்
கொடைக்கானல் சுற்றுலா வந்த டாக்டர் விபத்தில் பலி
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா வந்த டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரும்பாறை:
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 11 பேர் ஒரு வேனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பினர்.
கொடைக்கானல்- வத்தலக்குண்டு மைலைச் சாலையில் உள்ள மச்சூர் அருகே வந்த போது திடீரென வேன் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் வந்த டாக்டர் வினோத்கண்ணன் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி வினோத்கண்ணன் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.