செய்திகள்

பணம் வைத்து சூதாட்டம்: 5 பேர் கைது - ஆயிரக்கணக்கில் பணம் பறிமுதல்

Published On 2019-02-06 12:11 GMT   |   Update On 2019-02-06 12:11 GMT
ஈரோடு அருகே உள்ள வீரப்பன்சத்திரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் ஆயிரக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் பணம் வைத்து சூதாடிய ஈரோடு மாவட்டம் பொய்க்குற்றம் சாட்டி கணவருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து எஸ்.பி. சக்தி கணேசன் உத்தரவின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஈரோடு வீரப்பன்சத்திரம் அதியமான் வீதியில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தது தெரியவந்தது இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சுந்தரமூர்த்தி (40), குமார் (42), பழனிச்சாமி (48), தன்சுக் (44), தங்கராஜ் (40) என தெரியவந்தது. இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகளும் ரூ.78 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News