செய்திகள்

ஓசூர் அருகே கண்டெய்னர் லாரி மோதி வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி

Published On 2019-01-16 16:36 GMT   |   Update On 2019-01-16 16:36 GMT
ஓசூர் அருகே குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக பகுதியான அத்திப்பள்ளியில், டி.வி.எஸ். கிராஸ் பகுதியில் சாலையோரத்தில் குழாய் பதிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து, பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது வேகமாக மோதியது. 

இதில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மொகிந்தர் பத்ரா(28) மற்றும் விவேக்குமார்(50) ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 3 தொழிலாளர்கள் பலத்த அடிபட்டு, சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News