search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "north state person death"

    ஓசூர் அருகே குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக பகுதியான அத்திப்பள்ளியில், டி.வி.எஸ். கிராஸ் பகுதியில் சாலையோரத்தில் குழாய் பதிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து, பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது வேகமாக மோதியது. 

    இதில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மொகிந்தர் பத்ரா(28) மற்றும் விவேக்குமார்(50) ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் 3 தொழிலாளர்கள் பலத்த அடிபட்டு, சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரித்து வருகிறார்கள்.
    புதுவை ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் இன்று காலை மயங்கி விழுந்து இறந்தார்.

    புதுச்சேரி:

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்நேத்தன், (வயது23). இவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். 

    இந்த நிலையில் புதுவையில் இருந்து செல்லும் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று காலை புதுவை ரெயில் நிலையத்துக்கு வந்தார். டயர் கம்பெனியின் சூப்பர்வைசர் வினோத் அவரை காரில் அழைத்து வந்திருந்தார்.

    ரெயில் நிலையத்தில் இருந்த அஜய்நேத்தன் திடீர் என மயங்கி விழுந்தார். அவருடன் கூட வந்தவர்கள் அஜய்நேத்தனை மீட்டு அவர்கள் வந்த காரிலேயே ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அஜய்நேத்தன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×