செய்திகள்

கோவை மத்திய சிறையில் ஆயுள் கைதி உயிரிழப்பு

Published On 2019-01-09 04:46 GMT   |   Update On 2019-01-09 04:46 GMT
கோவை மத்திய சிறையில் ஆயுள் கைதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி(வயது 56).

இவர் அப்பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ராமசாமி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்று அதிகாலை 3.40 மணிக்கு இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு ஜெயில் ஊழியர்கள் ஓடிச்சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News