செய்திகள்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியது சி.வி.சண்முகத்தின் சொந்த கருத்து - ஓ.பன்னீர்செல்வம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியது அமைச்சர் சிவி சண்முகத்தின் சொந்த கருத்து என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். #OPanneerselvam#cvshanmugam
ஆலந்தூர்:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி என்றும், சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். இந்த கருத்தை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரும் ஆதரித்தார்.
இந்த நிலையில் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விமானநிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதை அவரது சொந்த கருத்தாக பார்க்கிறேன் என்று தெரிவித்தார். மேலும், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்’ என்றும் அவர் தெரிவித்தார். #OPanneerselvam#cvshanmugam
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி என்றும், சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். இந்த கருத்தை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரும் ஆதரித்தார்.
இந்த நிலையில் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விமானநிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதை அவரது சொந்த கருத்தாக பார்க்கிறேன் என்று தெரிவித்தார். மேலும், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்’ என்றும் அவர் தெரிவித்தார். #OPanneerselvam#cvshanmugam