செய்திகள்

கூடலூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை மாயம்

Published On 2018-12-19 10:06 GMT   |   Update On 2018-12-19 10:06 GMT
கூடலூர் அருகே மாயமான தனியார் பள்ளி ஆசிரியையை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் சாமுவேல் மகள் ஷாமிலி(வயது23). கம்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக ஷாமிலி வீட்டில் கூறிச்சென்றுள்ளார்.

இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பள்ளிக்கு சென்று விசாரித்தபோது ஷாமிலி அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களது வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் குமுளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் தேவாரத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் தனது மகளை கடத்தியிருக்கக்கூடும் என சாமுவேல் குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ஆசிரியையை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News