செய்திகள்

வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்- திமுக கோரிக்கை

Published On 2018-11-05 13:39 GMT   |   Update On 2018-11-05 13:39 GMT
இளையான்குடி பாசன கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது. #DMK
மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுப.மதியரசன் தலைமையில் நடந்தது.

பேரூர் செயலர் நஜிமுதீன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்ற ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகை தண்ணீர் இளையான்குடி பகுதியில் உள்ள பாசன கண்மாய்களுக்கு கிடைக்க தண்ணீர் திறக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவைத்தலைவர் பெரியசாமி, துணைச் செயலர் மலைமேடு, நிர்வாகிகள் மூக்கையா, மலைச்சாமி, சேதுபதி துரை, சுந்தரம், அய்யனார், சிவனேசன், பழனிவேல், அஜய்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK
Tags:    

Similar News