டி20 உலக கோப்பைக் கிரிக்கெட்: முதல் முறையாக பங்கேற்கவுள்ள இத்தாலி அணி அறிவிப்பு
- டி20 உலக கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
- முதல் முறையாக இடி20 உலக கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இத்தாலி அணி விளையாடவுள்ளது
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
முதல் முறையாக இந்த போட்டியில் விளையாட இருக்கும் இத்தாலி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தென் ஆப்பிரிக்க சர்வதேச வீரர் ஜே.ஜே. ஸ்மட்ஸ் இடம்பெற்றுள்ள 15 பேர் கொண்ட அணிக்கு வெய்ன் மேட்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். இத்தாலி அணி வீரர்கள் விவரம்:-
வெய்ன் மேட்சன் (கேப்டன்), ஜைன் அலி, மார்கஸ் காம்போபியானோ, அலி ஹசன், கிரிஷன் கலுகமகே, ஹாரி மானென்டி, ஜியான் பியோரோ, அந்தோனி மோஸ்கா, ஜஸ்டின் மோஸ்கா, சையத் நக்வி, பெஞ்சமின் மானென்டி, ஜஸ்பிரீத் சிங், ஜே.ஜே. ஸ்மட்ஸ், கிரான்ட் ஸ்டூவர்ட், தாமஸ் டிராகா.
இதுவரை 15 அணிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் இன்னும் அணிகளை தேர்வு செய்ய வேண்டும்.