கிரிக்கெட் (Cricket)

நாளை முதல் வதோதராவில் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்

Published On 2026-01-18 11:40 IST   |   Update On 2026-01-18 11:40:00 IST
  • 4-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 ஆட்டத்திலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.

நேற்றுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தன. இன்று ஓய்வு நாளாகும்.

நாளை முதல் 2-வது மற்றும் இறுதிகட்ட ஆட்டங்கள் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெறுகிறது.

11 போட்டிகள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 ஆட்டத்திலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் (5 போட்டி), குஜராத் ஜெய்ன்ட்ஸ் (4), உ.பி. வாரியர்ஸ் (5) தலா 4 புள்ளிகளுடனும், டெல்லிகேப்பிடல்ஸ் 2 புள்ளியுடனும் (4) உள்ளன.

நாளை நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன.

Tags:    

Similar News