செய்திகள்
வேட்டவலத்தில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
வேட்டவலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வேட்டவலம்:
வேட்டவலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கே.செல்வமணி முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவர்கள் டெங்கு மற்றும் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி பள்ளியில் இருந்து அரண்மனை வீதி, கடை வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர்.
இதில் வேட்டவலம் அரிமா சங்கத்தலைவர் ஜான்பீட்டர், இளங்கோவன், ரமேஷ், சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர் வெற்றிவேலன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர்கள் அனைவருக்கும் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
வேட்டவலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கே.செல்வமணி முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவர்கள் டெங்கு மற்றும் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி பள்ளியில் இருந்து அரண்மனை வீதி, கடை வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர்.
இதில் வேட்டவலம் அரிமா சங்கத்தலைவர் ஜான்பீட்டர், இளங்கோவன், ரமேஷ், சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர் வெற்றிவேலன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர்கள் அனைவருக்கும் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.