செய்திகள்

அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்பதா?- முக ஸ்டாலினுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கண்டனம்

Published On 2018-10-30 05:02 GMT   |   Update On 2018-10-30 05:02 GMT
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று கூறிய மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். #ADMK #MinisterPandiarajan #DMK #MKStalin
திருவள்ளூர்:

திருவள்ளூரில் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் மகன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே பொறுப்பாளர்களை நியமித்த கட்சி அ.தி.மு.க தான். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைவிட இருமடங்கு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்.

அதற்காக அ.தி.மு.க நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தயாராக இருக்கிறார்கள். பூந்தமல்லி தொகுதி பொறுப்பாளராக நான் இருப்பதால் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.


திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.

ஸ்டாலினின் ஆணவப் பேச்சால் தான் ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் இழந்தனர். பிரியாணி கடை யை அடித்து உடைப்பதும், பியூட்டி பார்லரில் பெண்களை தாக்குவதும், பேன்சி ஸ்டோரை அடித்து உடைக்கும் தி.மு.க. வினரை முதலில் கட்டுக்கோப்போடு நடத்துங்கள். உங்கள் அராஜகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தலில் யார் ஜெயிப்பது, யாரை எங்கே அனுப்புவது என்று பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterPandiarajan #DMK #MKStalin
Tags:    

Similar News