செய்திகள்

வேதாரண்யம் அருகே கார் விபத்தில் மாணவர் பலி

Published On 2018-10-27 10:31 GMT   |   Update On 2018-10-27 10:31 GMT
வேதாரண்யம் அருகே கார் விபத்தில் மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த மருதூரை சேர்ந்தவர் ராகவன். கார் டிரைவர். இவர் நேற்று தனது காரில் செட்டிபுலத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி எழிலரசி, அவரது மகள் வர்சினி, உறவினர் ராஜேஷ் ஆகியோரை ஏற்றிக்கொண்டு திருச்சி விமான நிலையம் சென்றார். அவர்கள் கரியாப்பட்டினம் பகுதியில் சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து காரின் மீது விழுந்தது. இதில் ராகவன் உள்பட 4 பேரும் காயமடைந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கரியாப் பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கரியாபட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ்(வயது 18). திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இவர் தெற்குகாடு செட்டிபுலத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் ஆவார். இவர் வேதாரண்யம் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார் என்பது விசாரணையில் தெரிவந்துள்ளது.

Tags:    

Similar News