செய்திகள்

திருமணம் செய்யாவிட்டால் ஆசிட் வீசுவேன்- மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர்

Published On 2018-10-26 10:45 GMT   |   Update On 2018-10-26 10:45 GMT
திருக்கோவிலூரில் திருமணம் செய்யாவிட்டால் ஆசிட் வீசுவேன் என்று மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் வடக்கு வீதி, கங்கையம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மனைவி கீதா (வயது45). இவர்களது மகள் பிரியதர்‌ஷனி.

இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வருகின்றார். பிரியதர்ஷினி தினமும் கல்லூரிக்கு போகும் போதும், வீடு திரும்பும் போது திருக்கோவிலூர் வடக்கு மாடவீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் (வயது 39) என்பவர் அவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்தார்.

அவ்வாறு தன்னை திருமணம் செய்து கொள்ளா விட்டால் முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் தமிழ்ச் செல்வன் கீதாவின் கடைக்கு சென்று அங்கிருந்த கீதா மற்றும் அவரது மகள் பிரியதர்ஷினி ஆகிய 2 பேரையும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டினார்.

இது குறித்து கீதா திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் உடனே நடவடிக்கை எடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மகேஷ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் மீது வழக்குபதிவுசெய்து வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News