செய்திகள்
செம்மஞ்சேரியில் பஸ் மோதி தொழிலாளி பலி
செம்மஞ்சேரியில் பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:
செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 58), தொழிலாளி. இவர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக சைக்கிளில் சென்றார்.
சுனாமி குடியிருப்பு சந்திப்பில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த மாநகர பஸ் திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.