செய்திகள்
பாலியல் புகாரில் கைதான ஆசிரியரை விடுவிக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்ககோரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம்:
செங்கம் மேல்நாச்சிபட்டு அரசுப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த கும்பல் ஆசிரியரை அடித்து உதைத்தனர்.
அப்போது, ஆசிரியரை விட்டு விடுமாறு மாணவ, மாணவிகள் கதறி அழுதனர். ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறினர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஆசிரியர் கண்ணனை விடுவிக்ககோரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து, கண்ணக்குருக்கை- மேல்நாச்சிப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் கண்ணனை விடுதலை செய்ய கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
செங்கம் மேல்நாச்சிபட்டு அரசுப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த கும்பல் ஆசிரியரை அடித்து உதைத்தனர்.
அப்போது, ஆசிரியரை விட்டு விடுமாறு மாணவ, மாணவிகள் கதறி அழுதனர். ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறினர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஆசிரியர் கண்ணனை விடுவிக்ககோரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து, கண்ணக்குருக்கை- மேல்நாச்சிப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் கண்ணனை விடுதலை செய்ய கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews