செய்திகள்

சூதாட்டம் போன்று தினகரன் அரசியல் நடத்துகிறார்- கே.பி.முனுசாமி பேட்டி

Published On 2018-10-20 06:58 GMT   |   Update On 2018-10-20 06:58 GMT
டி.டி.வி. தினகரனின் செயல்பாடுகள் சூதாட்டம் ஆடுவது போன்று உள்ளது என கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். #kpmunusamy #dinakaran #metoo

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி கரூர் மாணிக்கம் இல்லத் திருமண விழா நடந்தது. இதில் கே.பி.முனுசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டி.டி.வி. தினகரனின் செயல்பாடுகள் சூதாட்டம் ஆடுவது போன்று உள்ளது. அப்பாவி தொண்டர்களை ஏதேனும் சொல்லி, ஏமாற்றும் நிலையில் உள்ளார். ஆனால் தொண்டர்களை ஏமாற்ற முடியாது.


நம் நாடு பல்வேறு மதங்கள் கலாச்சாரங்கள் சார்ந்தது. அந்த உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் நடத்தப்பட வேண்டும். சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு எந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கின்றது என பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒரு காலத்தில் பெண்களை இந்த சமூகம் பாரபட்சமாக நடத்தியதுண்டு. அப்போது பெண்கள் பாலியல் தொல்லை குறித்து வெளியே சொல்வதற்கு வாயப்பில்லாமல் இருந்தது. மேலும் வெளியில் சொன்னால் மானம் மரியாதை போய் விடும் என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #kpmunusamy #dinakaran #metoo

Tags:    

Similar News