செய்திகள்

ஆரணி அருகே வாகன விபத்தில் வாலிபர் பலி

Published On 2018-10-19 12:00 GMT   |   Update On 2018-10-19 12:07 GMT
ஆரணி அருகே வாகன விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி:

ஆரணி அடுத்த விலைகிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்(வயது 30) கூலி தொழிலாளி. இவர் நேற்றிரவு ஆரணியில் நடந்த உறவினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்ட அவர் சேத்துப்பட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது.இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவலறிந்த ஆரணி டவுன் போலீசார் உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News