செய்திகள்

திமுக எம்பி-எம்எல்ஏக்கள் வெள்ள நிவாரண நிதி: முக ஸ்டாலினுக்கு கேரள முதல்மந்திரி நன்றி

Published On 2018-10-09 09:35 GMT   |   Update On 2018-10-09 09:35 GMT
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் திமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண நிதி உதவிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். #PinarayiVijayan #MKStalin
சென்னை:

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்கி உள்ளனர். இதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், அந்த கட்சியின் எம்.பி.க்கள், தமிழக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளனர்.

உங்களுடைய இந்த உதவிக்கு கேரள மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #DMKMLAs #DMKMPs #KeralaFlood #KeralaCM #PinarayiVijayan
Tags:    

Similar News